சூளகிரி வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

சூளகிரி வட்டாட்சியர் அலுவலகம்  முற்றுகை
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த பஸ்தலப்பள்ளி கிராமத்துக்கு அருகே, தனியாருக்கு சொந்தமான கல் குவாரி செயல்பட்டு வருகிறது. இங்கு வைக்கப்படும் வெடி களால் பஸ்தலப்பள்ளி கிராமத்தில் உள்ள வீடுகளில் விரிசல் விழுந்துள்ளது. மேலும் குவாரிக்கு வந்து செல்லும் லாரிகளில் இருந்து வெளியேறும் புழுதி விவசாய பயிர்கள் மீது படிந்து விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி எர்ரண்டப் பள்ளி, காளிங்கவரம் வழியாக, குவாரிக்கு அதிவேகமாக லாரிகள் செல்வதால் அச்சத்துடன் சென்றுவர வேண்டிய நிலை உள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் எல்லப்பா என்பவரது வீட்டின் முன் இருந்த ஓட்டு வீட்டில் கல் விழுந்தது.

இதனால் பஸ்தலப்பள்ளி, எர்ரண்டப்பள்ளி, காளிங்கவரம் பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் குவாரியை மூட வலியுறுத்தி சூளகிரி வட்டாட்சியர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். சூளகிரி வட்டாட்சியர் பூவிதன் மற்றும் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி குவாரியில் வெடி வைப்பதை நிறுத்தியுள்ளதாக கூறினர். மேலும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தால் மக்கள் கலைந்து சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in