

விளாத்திகுளத்தில் ஆற்றுப்புறம்போக்கு நிலத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்வதை தடுக்கக் கோரி, அப்பகுதி பெண்கள், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள்குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், விளாத்திகுளம் 7-வது வார்டு போலீஸ் லைன் தெருவைச் சேர்ந்த பெண்கள் சுமார் 50 பேர் அளித்த மனு விவரம்:
விளாத்திகுளம் 7-வது வார்டில் உள்ள ஆற்றுப்புறம்போக்கு நிலத்தை பல ஆண்டுகளாக சிறுவர்கள் விளையாடவும், முதியோர், பெண்கள் நடைபயிற்சி செய்யவும் பயன்படுத்தி வருகிறோம். இந்த நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய கடந்த 6 ஆண்டுகளாக சிலர் முயன்று வருகின்றனர்.
தனிநபர் ஒருவர் அந்த இடத்தில் கட்டிடம் கட்ட முயற்சி செய்கிறார். ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தி, குறிப்பிட்ட நிலத்தை பொது பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும்.
வேலைவாய்ப்பு
எனது கணவர் செல்வம் கரோனாவால் 19.10.2020-ல் இறந்துவிட்டார். அவர் கூலி வேலைசெய்துதான் எங்கள் குடும்பத்தைகாப்பாற்றி வந்தார். தற்போது, வேறு வருவாயின்றி, மூன்று பெண்குழந்தைகளுடன் கஷ்டப்படுகிறேன். எனக்கு ஏதாவது ஒரு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.
பேருந்து வசதி
தூத்துக்குடி- கீழசெய்தலை, தூத்துக்குடி- கொல்லம்பரும்பு, தூத்துக்குடி- மிளகுநத்தம், தூத்துக்குடி- வெள்ளாரம், விளாத்திகுளம்- குமரெட்டியாபுரம் உள்ளிட்ட கிராமப் பகுதிகளுக்கான பேருந்துகள் இன்னும் இயக்கப்படவில்லை. இந்த பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என,அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வு பெற்ற ஆசிரியர் தர்ணா