

கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் நேற்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் 7,561 பேர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் குரூப்-1 தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றது. கோவை மாவட்டத்தில் 24 மையங்களில் இத்தேர்வு நடைபெற்றது. தேர்வு எழுதுவோர் முகக்கவசம் அணிந்தும், வெப்பமானி கொண்டு உடல் வெப்பநிலையை பரிசோதித்து, கிருமிநாசினியால் கைகளை சுத்தம் செய்ய பின்னரே அனுமதிக்கப்பட்டனர். காலை 10 மணிக்குத் தொடங்கிய தேர்வு, மதியம் ஒரு மணி வரை நடைபெற்றது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் க.பாலச்சந்திரன், கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, வட்டாட்சியர்கள் மகேஷ்குமார், அருள்முருகன் ஆகியோர் தேர்வு மையங்களை ஆய்வு செய்தனர். மேலும், 24 முதுநிலைக் கண்காணிப்பாளர்கள், துணை ஆட்சியர் நிலையில் 5 பறக்கும் படை அலுவலர்கள், 9 நடமாடும் அலுவலர்கள், 40 தேர்வுக் கண்காணிப்பு அலுவலர்கள் ஆகியோர் தேர்வைக் கண்காணித்தனர். தேர்வு எழுதுவோர் மையங்களுக்கு வந்து செல்ல ஏதுவாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
கோவை மாவட்டத்தில் தேர்வெழுத 11,888 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 5,109 பேர் மட்டுமே தேர்வெழுதினர். 6,679 பேர் தேர்வெழுதவில்லை.
வாக்குவாதம்
திருப்பூர்
தேர்வெழுத அனுமதிக்கப்பட்டவர்களில் 2,064 பேர் மட்டுமே தேர்வெழுதினர். மீதமுள்ள 2,437 பேர் தேர்வெழுதவில்லை.
நீலகிரி