பைக் மீது லாரி மோதி இருவர் உயிரிழப்பு

பைக் மீது லாரி மோதி இருவர் உயிரிழப்பு
Updated on
1 min read

வெங்கடேசனின் சித்தப்பா பிரபாகரனின் மகள் சந்தியா(18), உறவினர் மகள் சத்தியப்பிரியா(18) ஆகிய இருவரும் திருநின்றவூரில் உள்ள தனியார் பல்பொருள் அங்காடியில் பணிபுரிந்து வந்தனர்.

அவர்களை வெங்கடேசன் நாள்தோறும் தன் மோட்டார் சைக்கிளில் பல்பொருள் அங்காடியில் விட்டு வருவது வழக்கம்.

வெங்கடேசன் நேற்றும் தன் மோட்டார் சைக்கிளில், சந்தியா, சத்தியப்பிரியா ஆகியோரை பல்பொருள் அங்காடிக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார். அப்போது, திருநின்றவூரில் இருந்து பெரியபாளையம் நோக்கிச் சென்ற சிமென்ட் லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இச்சம்பவத்தில், படுகாயமடைந்த வெங்கடேசனும், சத்தியப்பிரியாவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சந்தியா திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து, பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in