கடலூர் அருகே இன்று மக்கள் கிராமசபை கூட்டம் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்பு எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்

கடலூர் அருகே இன்று மக்கள் கிராமசபை கூட்டம் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்பு எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்
Updated on
1 min read

கடலூர் அருகே இன்று திமுக சார்பில் நடைபெறும் மக்கள் கிராமசபைக் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை:

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் இன்று (ஜன.4) மாலை 3 மணியளவில் பாதிரிக்குப்பம் ஊராட்சியில் மக்கள்

கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. அதுசமயம் வருகை தரும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கடலூர் மாவட்ட எல்லையான சிதம்பரம் அருகே உள்ள வல்லம்படுகையில் இன்று மதியம் 12 மணியளவில் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்படவுள்ளது. வரவேற்பு நிகழ்ச்சியிலும் மற்றும் மக்கள் கிராம சபைக் கூட்டத்திலும் மாநில, மாவட்ட திமுக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி, வார்டு திமுக செயலாளர்கள் மற்றும் பிற அணிகளின் நிர்வாகிகள், தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தினர், விவசாயிகள், இளைஞர்கள்,பொதுமக்கள் பெருந்திரளாக கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in