நெல்லையில் 6,782 பேர் குரூப் 1 தேர்வு எழுதினர் விண்ணப்பித்தவர்களில் பாதிபேர் பங்கேற்கவில்லை

நெல்லையில் 6,782 பேர் குரூப் 1 தேர்வு எழுதினர் விண்ணப்பித்தவர்களில் பாதிபேர் பங்கேற்கவில்லை
Updated on
1 min read

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 1 தேர்வு திருநெல்வேலியில் 38 இடங்களில் உள்ள 44 தேர்வு மையங்களில் நடைபெற்றது.

விண்ணப்பித்திருந்தவர்களில் பாதிபேர் தேர்வு எழுத வரவில்லை.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் குரூப் 1 முதல்நிலை தேர்வை நேற்று நடத்தியது. . திருநெல்வேலி மாவட்டத்தில் இத்தேர்வு 38 இடங்களில் உள்ள 44 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இத் தேர்வை கண்காணிக்க 44 ஆய்வுக்குழு அலுவலர்களும், 4 பறக்கும் படை அலுவலர்களும், வட்டாட்சியர் மற்றும் துணை வட்டாட்சியர் நிலையில் 11 சுற்றுக்குழு அலுவலர்களும் நியமனம் செய்யப்பட்டிருந்தனர்.

இத் தேர்வை எழுத மாவட்டத்தில் 12,941 பேர் அனுமதி சீட்டு பெற்றிருந்தனர். ஆனால் 6,782 பேர் மட்டுமே இத் தேர்வை எழுதினர். 6,159 பேர் தேர்வை எழுதவில்லை.

பாளையங்கோட்டை சாராள் தக்கர் கல்லூரி மையத்தில் நடைபெற்ற தேர்வை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு பார்வையிட்டார். மாவட்ட வருவாய் அலுவலர் எ. பெருமாள், சார் ஆட்சியர் (பொறுப்பு) எ.வி. மூர்த்தி, பாளையங்கோட்டை வட்டாட்சியர் க. செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in