நெல்லையில் 3 இடங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை முகாம்

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி ஒத்திகை சிறப்பு முகாம் நடைபெற்றது. படம்: மு.லெட்சுமி அருண்
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி ஒத்திகை சிறப்பு முகாம் நடைபெற்றது. படம்: மு.லெட்சுமி அருண்
Updated on
1 min read

தமிழகத்தில் 17 இடங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை சிறப்பு முகாம்கள் நேற்று நடத்தப்பட்டன. திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருநெல்வேலி மாநகரப் பகுதியில் சமாதானபுரம் ஆரம்ப சுகாதார நிலையம், திருநெல்வேலி புறநகர்ப் பகுதியில் ரெட்டியார்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் இம்முகாம் நடைபெற்றது.

இந்த ஒத்திகை முகாமுக்காக சுகாதாரத்துறையை சேர்ந்த 21,170 பேருக்கு 4 கட்டங்களாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள், சுகாதார ஆய்வுப் பணியாளர்களுக் கும், 2-ம் கட்டமாக வருவாய்த் துறை யினர், காவல் துறையினர், ராணுவத் துறையினருக்கும், 3-ம் கட்டமாக 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மையத்திலும் ஒரு நாளைக்கு 100 பேருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in