காஞ்சி அருகே 3 கிலோ கஞ்சா பறிமுதல்6 பேர் கைது

காஞ்சி அருகே 3 கிலோ கஞ்சா பறிமுதல்6 பேர் கைது
Updated on
1 min read

காஞ்சிபுரம் வசந்தம் நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல் ஆய்வாளர் ராஜகோபாலுக்கு தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து காஞ்சி போலீஸார் அந்தப் பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது மினி லாரி ஒன்றில் கஞ்சா வைத்துக் கொண்டு விற்பனை செய்துவருவது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக அய்யங்கார்குளம் முகம்மது அன்சாரி, சகாதேவன் மற்றும் 4 சிறுவர்கள் உட்பட 6 பேரை போலீஸார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சா மற்றும் மினி லாரி ஒன்று, எலெக்ட்ரானிக் எடை இயந்திரம், செல்போன், ஆகியவற்றையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in