வக்பு வாரியத்தின் மூலம் முஸ்லிம் பெண்கள் கல்லூரி தொடங்க வேண்டும் முதல்வரிடம் கோரிக்கை மனு

திருச்சி நத்தர்வலி தர்ஹாவுக்கு வருகைதந்த முதல்வர் பழனிசாமியிடம் கோரிக்கை மனு அளித்த தர்ஹா அறங்காவலரும், மருத்துவருமான எம்.ஏ.அலீம். உடன் அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன்.
திருச்சி நத்தர்வலி தர்ஹாவுக்கு வருகைதந்த முதல்வர் பழனிசாமியிடம் கோரிக்கை மனு அளித்த தர்ஹா அறங்காவலரும், மருத்துவருமான எம்.ஏ.அலீம். உடன் அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன்.
Updated on
1 min read

தேர்தல் பிரச்சாரத்துக்காக திருச்சிக்கு வந்திருந்த முதல்வர் பழனிசாமி நேற்று முன்தினம் நத்தர்வலி தர்ஹாவுக்குச் சென்று சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டார். அப்போது அந்த தர்ஹாவின் அறங்காவலரும், மூளை நரம்பியல் மருத்துவருமான டாக்டர் எம்.ஏ.அலீம் முதல்வரிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது:

தமிழகத்தில் வக்பு வாரியத்தின் மூலம் இதுவரை மதுரையில் ஒரு கலைக் கல்லூரி இயங்கி வருகிறது. தமிழகத்தில் உள்ள முஸ்லிம் பெண்களின் கல்வித் திறனை அதிகரிக்கும் வகையில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில், வக்பு வாரியத்துக்குச் சொந்தமான இடத்தில் அரசு வக்பு வாரிய முஸ்லிம் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியைத் தொடங்க வேண்டும். அதேபோல தமிழகத்தில் ஏதாவது ஒரு மாவட்டத்தில் வக்பு வாரியத்தின் மூலம் ஒரு மருத்துவக் கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in