திருப்பூரில் 4-ம் தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தம்

திருப்பூரில் 4-ம் தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தம்
Updated on
1 min read

திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மின் வாரியம் சார்பில் புதிய திருப்பூர் மேம்பாட்டுக் கழகத்தின் தலைமை நீரேற்று நிலையத்தில் வரும் 4-ம் தேதி பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.

இதனால் மின் விநியோகம் தடைபடுவதால், புதிய திருப்பூர் மேம்பாட்டுக் கழகத்தின் குடிநீர் திட்டத்தில் நீரேற்றம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. இதனால் மாநகருக்கு குடிநீர் விநியோகம் முற்றிலும் தடைபடும். எனவே, பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in