மேட்டூர் அணையில் நீர் திறப்பு குறைப்பு

மேட்டூர் அணையில் நீர் திறப்பு குறைப்பு

Published on

டெல்டா மாவட்டங்களில் வட கிழக்குப் பருவமழை குறைந்ததை அடுத்து, அங்கு பாசனத்துக்கான நீர் தேவை அதிகரித்தது. இதனால், மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில், டெல்டா மாவட்டத்தில் மழை பெய்ததால், பாசனத்துக்கு நீர் தேவை குறைந்தது.

இதையடுத்து, மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு நேற்று காலை முதல் விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. கால்வாய் பாசனத்துக்கு நீர் திறப்பு விநாடிக்கு 400 கனஅடியாக நீடிக்கிறது. நீர்வரத்து நேற்று 877 கனஅடியாக இருந்தது. நீர்மட்டம் 105.42 அடியாகவும், நீர் இருப்பு 72.42 டிஎம்சி-யாகவும் உள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in