திருவண்ணாமலை அருகே அமமுக ஆலோசனை கூட்டம்

அமமுக ஆலோசனைக் கூட்டத்தில் பேசும் மாவட்டச் செயலாளர் பரந்தாமன்.
அமமுக ஆலோசனைக் கூட்டத்தில் பேசும் மாவட்டச் செயலாளர் பரந்தாமன்.
Updated on
1 min read

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் (மேற்கு) ஒன்றிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் சட்டப்பேரவை தேர்தலையொட்டி ஆலோசனைக் கூட்டம் திருவண்ணாமலை அடுத்த மல்லவாடியில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஒன்றியச் செயலாளர் முருகன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பரந்தாமன் சிறப்புரையாற்றினார். அப்போது அவர், “சட்டப் பேரவைத் தேர்தலில் கடுமையாக உழைத்து பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் கரத்தை வலுத்தப்படுத்த வேண்டும். கட்சியின் சின்னமான குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.

இதில், மாவட்ட பேரவை செயலாளர் சஞ்சய், மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் கிருபானந்தவாரியார், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் சம்பத், துரிஞ்சாபுரம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் ஆனந்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in