5 வட்டாட்சியர்களுக்கு பதவி உயர்வு

5 வட்டாட்சியர்களுக்கு பதவி உயர்வு
Updated on
1 min read

வேலூர், தி.மலை மாவட்டங்களில் 5 வட்டாட்சியர்கள் துணை ஆட்சியர்களாக பதவி உயர்வு பெற்று பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் 57 வட்டாட் சியர்கள் துணை ஆட்சியர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதற்கான உத்தரவை அரசு கூடு தல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா பிறப்பித்துள் ளார். வேலூர் மாவட்டத்தில் வட்டாட்சியர் சாந்தி, சென்னை விமான நிலைய விரிவாக்கம் (நில எடுப்பு) தனித்துணை ஆட்சி யராகவும், வட்டாட்சியர் சரஸ் வதி, காஞ்சிபுரம் மாவட்டம் கலால் உதவி ஆணையராகவும், வட்டாட் சியர் குணசீலன், ஓசூர் கெயில் (இந்தியா) ஒருங்கிணைப்பு அலுவலராகவும் பதவி உயர்வு பெற்று பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல், தி.மலை மாவட் டத்தில் வட்டாட்சியர் ஜோதி சங்கர்,காஞ்சிபுரம் மாவட்டம் வழங்கல் அலுவலராகவும், வட்டாட்சியர் சரஸ்வதி விழுப்புரம் மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணை ஆட்சியராகவும் பதவி உயர்வு பெற்று பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in