திருப்பத்தூர் அருகேதொட்டியில் விழுந்த சிறுவன் உயிரிழப்பு

திருப்பத்தூர் அருகேதொட்டியில் விழுந்த சிறுவன் உயிரிழப்பு
Updated on
1 min read

திருப்பத்தூர் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் சின்ன கந்திலி ஊராட்சியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி விஜயேந்திரன்(39). இவரது மகன் ரோஹித்(5). இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் ரோஹித் திடீரென மாயமானார். உறவினர்கள் வீடு உட்பட பல்வேறு இடங் களில் ரோஹித்தை தேடியும் அவர் கிடைக்கவில்லை.

பின்னர், வீட்டின் அருகே யுள்ள தண்ணீர் தொட்டில் பார்த்தபோது, அதில் சிறுவன் விழுந்து கிடந்தார். உடனே, சிறுவனை மீட்ட பெற்றோர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு, மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது சிறுவன் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கந்திலி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in