ஊராட்சி ஊழியர் கொலை: தம்பதி கைது

ஊராட்சி ஊழியர் கொலை: தம்பதி கைது

Published on

கரூர் மாவட்டம் நெரூர் கிருஷ்ணன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கருப் பண்ணன்(52). திருமணமா காதவர். இவர், ஊராட்சியில் குடிநீர் குழாய் பதிக்கும் வேலை பார்த்து வந்தார்.

இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் அசோகன் (50). டைல்ஸ் ஒட்டும் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி செல்வி(45).

இந்நிலையில், அசோகன் வீட்டு முன் சாலையோரம் ஊராட்சி பொது குடிநீர் குழாய் அமைக்கும் பணியை கருப் பண்ணன் நேற்று முன்தினம் மேற்கொண்டுள்ளார்.

இதை அசோகன், செல்வி ஆகியோர் தடுத்து, கருப்பண் ணனை கீழே தள்ளியுள்ளனர். இதில், கீழே விழுந்து காயமடைந்த கருப்பண்ணன், சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து வாங்கல் போலீஸார் கொலை வழக்கு பதிவு செய்து, அசோகன், செல்வியை கைது செய்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in