வேளாண் சட்டங்களுக்கு எதிராக தி.மலையில் ஆர்ப்பாட்டம்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தி.மலையில் ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

மத்திய அரசின் வேளாண் சட்டங் களுக்கு எதிராக தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக புது டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, திருவண்ணாமலை அண்ணா சிலை அருகில் தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. விவசாயி களுக்கு ஆதரவான இந்தப் போராட்டத்துக்கு தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் கே.வி.ராஜ்குமார் தலைமை தாங்கினார். இதில், பங்கேற்றவர்கள் மத்திய அரசுக்கு எதிராகவும், வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தியும் முழக்கமிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in