திண்டிவனம் கிளை சிறையில் ஆட்சியர் ஆய்வு

திண்டிவனம் கிளைச்சிறையில் விழுப்புரம் ஆட்சியர் அண்ணாதுரை ஆய்வு மேற்கொண்டார்.
திண்டிவனம் கிளைச்சிறையில் விழுப்புரம் ஆட்சியர் அண்ணாதுரை ஆய்வு மேற்கொண்டார்.
Updated on
1 min read

திண்டிவனம் கிளைச் சிறையில் கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை நேற்று ஆய்வு மேற்கொண்டார். சிறைவாசிகளை சந்திக்க வருபவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டார். முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியினை பின்பற்றுவது, சிறைச்சாலைகளில் பணியாற்றக்கூடிய காவலர்கள், பணியாளர்கள் மற்றும் சிறைவாசிகளும் கட்டாயமாக முகக்கவசம் அணிவது குறித்தும் ஆய்வு நடந்தது.

இதை தொடர்ந்து திண்டிவனம் நகராட்சிக்கு உட்பட்ட கடைகள், பல்பொருள் அங்காடிகளில் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியினை பின்பற்றி பொருட்கள் வாங்கிச் செல்ல பொதுமக்களிடம், கடை உரிமை யாளர்கள் அறிவுறுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்த ஆய்வின்போது திண்டி வனம் சார் ஆட்சியர் அனு, துணை ஆட்சியர் (பயிற்சி) ரூபினா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in