விருத்தாசலம் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு ஆயுள்

விருத்தாசலம் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு ஆயுள்
Updated on
1 min read

விருத்தாசலம் அருகே 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டணை விதி்க்கப்பட்டது.விருத்தாசலம் அருகே உள்ள கோ.பவழங்குடி கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி கடந்த 25.12.2018-ல் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதுதொடர்பாக விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், அதே பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் மகன் அய்யாக்கண்ணு (27) என்பவரை கைது செய்தனர். இந்த வழக்கு கடலூர் போஸ்கோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிபதி எழிலரசி நேற்று இவ்வழக்கில் அய்யாக்கண்ணுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் கலைச்செல்வி ஆஜரானார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in