சிறுமி பலாத்கார வழக்கில் மேற்குவங்க இளைஞருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை ஈரோடு நீதிமன்றம் உத்தரவு

சிறுமி பலாத்கார வழக்கில் மேற்குவங்க இளைஞருக்கு  20 ஆண்டு சிறை தண்டனை  ஈரோடு நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஈரோடு மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் ரபியூல் மாண்டேல் (26). ஈரோடு பெருந்துறையை அடுத்த பணிக்கம்பாளையத்தில் தங்கி அங்குள்ள தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். இவர் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கடந்த 2019-ம் ஆண்டு போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

ஈரோடு மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மாலதி, பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான ரபியூல் மாண்டேலுக்கு, போக்சோ சட்டப்பிரிவின் கீழ் 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசால் பாலியல் தொந்தரவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியிலிருந்து ரூ.3 லட்சம் நிவாரணத் தொகையைப் பெற்றுத் தர மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதி பரிந்துரை செய்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in