குற்றாலநாத சுவாமி கோயிலில் நடராஜருக்கு தாண்டவ தீபாராதனை

குற்றாலநாத சுவாமி கோயிலில் நடராஜருக்கு பச்சை சார்த்தி, தாண்டவ தீபாராதனை நடைபெற்றது.
குற்றாலநாத சுவாமி கோயிலில் நடராஜருக்கு பச்சை சார்த்தி, தாண்டவ தீபாராதனை நடைபெற்றது.
Updated on
1 min read

தென்காசி மாவட்டம் குற்றாலத் தில் உள்ள குற்றாலநாத சுவாமி கோயிலில் திருவாதிரை திருவிழாகடந்த 21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினந்தோறும் சுவாமி, அம்பாள், நடராஜ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக 8-ம் நாள் திருவிழாவை முன்னிட்டு குற்றாலநாதர் காட்சி மாடத்தில் நடராஜ மூர்த்திக்கு பச்சை பட்டு உடுத்தி, பச்சை மலர்களால் ஆலங்கரிக்கப்பட்டு, தாண்டவ தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் கண்ணதாசன் தலைமையில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in