மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் ஆட்சியர் அலுவலகத்தில் விளாத்திகுளம் பகுதி விவசாயிகள் மனு
மழை, வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த விளாத்திகுளம் பேரிலோவன்பட்டி, முதலிப்பட்டி கிராம விவசாயிகள். படம்: என்.ராஜேஷ்
மழை, வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி விளாத்திகுளம் பகுதி விவசாயிகள் அழுகிய பயிர்களுடன் வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.