7-வது பொருளாதார கணக்கெடுப்புபொதுமக்கள் தயக்கமின்றி தகவல் அளிக்கலாம்

7-வது பொருளாதார கணக்கெடுப்புபொதுமக்கள் தயக்கமின்றி தகவல் அளிக்கலாம்
Updated on
1 min read

நாட்டு மக்களின் வளர்ச்சி நிலையை அறிந்து புதிய திட்டம் தயாரிக்க வசதியாக 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை பொருளாதார கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

அதன்படி, நாடு முழுவதும் 7-வது பொருளாதார கணக்கெடுப்பு நடந்து வருகிறது. கடந்த ஜனவரி மாதம், தொடங்கிய இக்கணக்கெடுப்பு, கரோனா தொற்று காரணமாக கிடப்பில் போடப்பட்டது. சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக கணக்கெடுப்பை முடிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், பொருளாதார கணக்கெடுப்பு நடப்பதால், வீடு மற்றும் நிறுவனங்களுக்கு வரும் கணக்கெடுப்பாளருக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

புள்ளியியல் துறை அதிகாரிகள் கூறும்போது,"செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள 8 வட்டாரங்களிலுள்ள 359 கிராம ஊராட்சிகள். நகரங்கள் 54 அலகுகளாக பிரிக்கப்பட்டு மின்னணு முறையில் கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது, கணக்கீட்டாளர்கள் செல்போன் மூலம் தங்களது தகவல்களை நேரடியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்கின்றனர். அடையாள அட்டையை பார்த்து, பொருளாதார கணக்கெடுப்புக்கான தகவல்களை தயக்கமின்றி அளிக்க வேண்டும்" என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in