ராமநாதபுரத்தில் கைதி மரணம்

ராமநாதபுரத்தில்  கைதி மரணம்
Updated on
1 min read

ராமநாதபுரத்தில் விசாரணைக் கைதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை தட்டான்தோப்பைச் சேர்ந்த முன்னாள் இந்து முன்னணி நிர்வாகி தவசிமுனி (52). இவரை அதே பகுதியைச் சேர்ந்த சேகர் (43) என்பவர் முன்விரோதம் காரணமாக கடந்த நவம்பர் 10-ம் தேதி கத்தியால் குத்திக் கொலை செய்தார். இவ்வழக்கில் கீழக்கரை போலீஸார் சேகரைக் கைது செய்து, ராமநாதபுரம் மாவட்டச் சிறையில் அடைத்தனர். சிறையில் இருந்த சேகருக்கு நேற்று அதிகாலை மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக, அவரை சிறை அலுவலர்கள் உடனடியாக ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து பஜார் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in