காவலர்களுக்கு சங்கம் அமைக்க அனுமதி அளிக்காவிட்டால் நோட்டாவிற்கு வாக்கு ஓய்வு பெற்ற காவலர் நலச்சங்கம் தீர்மானம்

காவலர்களுக்கு சங்கம் அமைக்க அனுமதி அளிக்காவிட்டால் நோட்டாவிற்கு வாக்கு ஓய்வு பெற்ற காவலர் நலச்சங்கம் தீர்மானம்
Updated on
1 min read

ஈரோடு மாவட்ட ஓய்வு பெற்ற காவலர் நலச்சங்கத்தின் கலந்தாய்வு கூட்டம் ஓய்வுபெற்ற டிஎஸ்பி கலியமூர்த்தி தலைமையில் நடந்தது. கூட்டத்தில், சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக காவலர்களுக்கு சங்கம் அமைக்க அனுமதி அளிக்காவிட்டால் நோட்டாவிற்கு வாக்களிப்பது, ஓய்வு பெற்ற நேர்மையான அரசு அதிகாரிகளை தேர்தலில் போட்டியிட வைப்பது என்பதுள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதனைத் தொடர்ந்து ஓய்வு பெற்ற டி.எஸ்.பி கலியமூர்த்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் ஒரு லட்சத்து 24 ஆயிரம் பேர் காவல்துறையில் பணியாற்றி வருகின்றனர். காவல்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற 75 ஆயிரம் பேர் உள்ளனர். இந்த 2 லட்சம் பேரின் குடும்பங்களை ஒருங்கிணைத்து, எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குகளை நோட்டாவிற்கு பதிவு செய்வோம்.

இதேபோல் தமிழகத்தில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள்,ஓய்வு பெற்றவர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் 44 லட்சத்து 68 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களையும் ஒருங்கிணைத்து எதிர்காலத்தில் தேர்தலில் போட்டியிட உள்ளோம், என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in