சாலை விபத்தில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

சாலை விபத்தில்  2 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
Updated on
1 min read

கிருஷ்ணகிரி அருகே சாலை விபத்தில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

கிருஷ்ணகிரி அடுத்த கேஆர்பி அணை பகுதியில் உள்ள பாறைக்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசாந்த் (23). இவர் இந்திய ராணுவத்தில் செகந்திராபாத்தில் பணியாற்றி வந்தார். தற்போது விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார். அதே கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (23). இவரும் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்தார். அண்மையில் கர்நாடகா மாநில பெங்களூருவில் பயிற்சியை முடித்தார். அதைத் தொடர்ந்து விடுமுறையில் அவரும் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

இருவரும் நேற்று இருசக்கர வாகனம் ஒன்றில் கிருஷ்ணகிரி அணை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். சுந்தேகுப்பம் பிரிவு சாலை பகுதியில் சென்ற போது, அடையாளம் தெரியாத வாகனம் அவர்களின் இருசக்கர வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் பிரசாந்த சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கோவிந்தராஜ், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனன்றி உயிரிழந்தார். இது தொடர்பாக கிருஷ்ணகிரி அணை காவல் நிலைய போலீஸார் விசாரிக் கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in