பிறந்து 2 நாட்களே ஆன குழந்தை கோழிப் பண்ணை அருகே மீட்பு

பிறந்து 2 நாட்களே ஆன குழந்தை கோழிப் பண்ணை அருகே மீட்பு
Updated on
1 min read

ஆவல்நத்தம் கிராமத்தில் பிறந்து 2 நாட்களே ஆன ஆண் குழந்தையை கோழிப் பண்ணை அருகே வீசிச் சென்ற சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமம் ஆவல்நத்தம். இக்கிராமத்தில் கிருஷ்ணன் என்பவருக்குச் சொந்தமான கோழிப் பண்ணை உள்ளது. இந்த கோழிப் பண்ணை அருகே பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டது.

இதையடுத்து அப்பகுதி மக்கள் அங்கு சென்று பார்த்த போது, பிறந்து 2 நாட்களே ஆன ஆண் குழந்தை ஒன்று இருந்தது. இதனைக் கண்ட பொதுமக்கள் குழந்தையை மீட்டு, குருபரப்பள்ளி போலீஸாருக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த போலீஸார் குழந்தையை மீட்டு, மாவட்ட குழந்தைகள் நல மைய அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக அப்பகுதியில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in