கீழவெண்மணி நினைவு தினக் கூட்டம்

கீழவெண்மணி நினைவு தினக் கூட்டம்
Updated on
1 min read

திருவாரூர் எல்ஐசி அலுவலக வளாகத்தில், இன்சூரன்ஸ் ஊழியர்கள் பங்கேற்ற கீழவெண்மணி தியாகிகள் நினைவு தினக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க தென்மண்டல கூட்டமைப்பு பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில், 3 புதிய வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும். பொதுத் துறைகளை தனியாருக்கு தாரை வார்க்கும் போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும். எல்ஐசியின் பங்குகளை விற்பனைச் செய்யக்கூடாது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு துணைத் தலைவர் சுவாமிநாதன், தஞ்சை கோட்டத் தலைவர் செல்வராஜ், தமுஎகச மாநில துணை பொதுச் செயலாளர் களப்பிரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in