தூத்துக்குடி ஆயுதப்படையில் டிஐஜி ஆய்வு

தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படையின் செயல்பாடுகளை டிஐஜி பிரவின்குமார் அபிநபு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படையின் செயல்பாடுகளை டிஐஜி பிரவின்குமார் அபிநபு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்ட ஆயுதப் படையின் செயல்பாடுகளை திருநெல்வேலி சரக டிஐஜி பிரவின்குமார் அபிநபு ஆய்வு செய்தார்.

இதனை முன்னிட்டு மாவட்ட காவல்துறை அலுவலக வளாக மைதானத்தில் நடைபெற்ற ஆயுதப்படை காவல் ஆய்வாளர் ஜாகிர் உசேன் தலைமையிலான அணிவகுப்பு மரியாதையை டிஐஜி ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து ஆயுதப்படை காவலர்களின் கவாத்து பயிற்சியை ஆய்வு செய்த டிஐஜி, காவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உபகரணங்கள், உடமைகள் ஆகியவற்றை பார்வையிட்டார். மாவட்ட காவல்துறை வாகனங்களை பார்வையிட்டு, அவை சரியான முறையில் பராமரிக்கப்படுகிறதா என கேட்டறிந்தார்.

காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், கூடுதல் கண்காணிப்பாளர்கள் கோபி, செல்வன், உதவி காவல் கண்காணிப்பாளர் (பயிற்சி) அபிஷேக் குப்தா, ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் கண்ணபிரான் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in