நெல்லை நூலக வளாகத்துக்கு தொ.பரமசிவன் பெயர் சூட்ட மனு

நெல்லை  நூலக வளாகத்துக்கு தொ.பரமசிவன் பெயர் சூட்ட மனு
Updated on
1 min read

தமிழ் பண்பாட்டு ஆய்வாளர் தொ. பரமசிவன் பெயரை திருநெல்வேலி மாவட்ட மைய நூலக வளாகத்துக்கு சூட்ட வேண்டும் என்று, பொதிகை தமிழ்ச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமிக்கு அச்சங்கத்தின் தலைவர் பே.ராஜேந்திரன் அனுப்பியுள்ள மனு:

திருநெல்வேலி மாவட்ட மைய நூலக வளாகத்துக்கு தொ.பரமசிவன் பெயரை சூட்ட வேண்டும்.

மைய நூலகம் அமைந்துள்ள சாலைக்கும் அவரது பெயரை சூட்ட வேண்டும். பெரியார் மறைந்த நாளில் தொ. பரமசிவன் மறைந்திருப்பதால் பெரியாரின் சிலையிலிருந்து கிழக்காக வரும் இந்த சாலைக்கு அவரது பெயர் சூட்டுவது பொருத்தமாக இருக்கும். மேலும் தொ.பரமசிவனின் படைப்புகள், நூல்கள் அனைத்தையும் அவரது குடும்பத்தினரின் ஒப்புதலோடு அரசுடைமையாக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in