ரூ.5 கோடி மோசடியில் ஈடுபட்டதனியார் நிறுவன அதிகாரி கைது

ரூ.5 கோடி மோசடியில் ஈடுபட்டதனியார் நிறுவன அதிகாரி கைது
Updated on
1 min read

சுங்குவார்சத்திரம் பகுதியில் கப்பாரோ என்ற கார் உதிரி பாகங்கள்தயாரிக்கும் நிறுவனம் உள்ளது.இதில் அதிகாரியாக பணிபுரிபவர் புதுச்சேரியைச் சேர்ந்த சிவராமலு. இவர் இந்நிறுவனத்தில் இருந்து வாடிக்கையாளருக்கு அனுப்ப வேண்டிய பணத்தை அனுப்பிவிட்டு, பின்னர் நிறுவனத்துக்கு தெரியாமல் வாடிக்கையாளரிடம், அந்தப் பணம் தற்போது நிறுவனத்துக்கு தேவை, பிறகு அனுப்புவதாகக் கூறி திரும்பபெற்றுக் கொண்டு, கணக்கு காண்பிக்காமல் மோசடி செய்துள்ளார்.

இதுபோல் ரூ.5 கோடியே 86 லட்சம் அளவுக்கு அவர் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக இந்நிறுவனத்தினர் போலீஸாரிடம் புகார் தெரிவித்தார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாரின் விசாரணையில் முனிவேல், ஆர்.எஸ்.இந்திரா, பிரித்திவி, வெங்கடேசன், சீனுவாசன் உள்ளிட்ட சிலரின் வங்கிக்கணக்குக்கு பணத்தை அனுப்பிவிட்டு அவர்களிடம் நிறுவனத்துக்கு தெரியாமல் பல்வேறு காரணங்களைக் கூறி சிவராமலு ரூ.5 கோடியே 86 லட்சம் திரும்பப் பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து சிவராமுலுவை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in