ராகுல் காந்தி, பிரியங்கா கைது கண்டித்து ஈரோட்டில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

ராகுல் காந்தி, பிரியங்கா கைது கண்டித்து ஈரோட்டில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

ராகுல்காந்தி, பிரியங்கா கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஈரோட்டில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி 2 கோடி கையெழுத்துடன் குடியரசுத் தலைவரை சந்திக்கச் சென்ற முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, செயலாளர் பிரியங்கா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் ராகுல், பிரியங்கா கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில்  மாவட்ட காங்கிரஸ் அலுவலகமான ஜவஹர் இல்லம் அருகே  ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி.ரவி தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜேந்திரன், விவசாய பிரிவு மாவட்ட தலைவர் பெரியசாமி, மாநகர மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை தலைவர் சுரேஷ், மாவட்ட துணைத் தலைவர் ராஜேஷ் ராஜப்பா உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தின்போது மத்திய அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in