புதினா வியாபாரி கொலை வழக்கில் 3 பேர் கைது

புதினா வியாபாரி கொலை வழக்கில் 3 பேர் கைது
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டம் தொட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜப்பா (55). இவர் கொத்தமல்லி, புதினா வியாபாரம் செய்து வந்தார். கடந்த 19-ம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்ற ராஜப்பாவை வழிமறித்த மர்ம கும்பல் கத்தியால் குத்திக் கொலை செய்தது. இவ்வழக்கு தொடர்பாக சூளகிரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், இக்கொலை வழக்கு தொடர்பாக தொட்டூர் கிராமத்தைச் சேர்ந்த ராமு(எ)ராமன்(40), மஞ்சுநாத்(34), மாரண்டப்பள்ளியைச்சேர்ந்த கணவாய்ப்பட்டி (21) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். அவர்களை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in