திட்டக்குடி அருகே பாலியல் வன்கொடுமை வழக்கில் இளைஞருக்கு ஆயுள்

திட்டக்குடி அருகே பாலியல் வன்கொடுமை வழக்கில் இளைஞருக்கு ஆயுள்
Updated on
1 min read

திட்டக்குடி வடகரை கிராமத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமி கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ம் தேதி அதே பகுதியில் உள்ள சமுதாயக் கூடத்தில் விளையாடி கொண்டிருந்தார். அங்கு வந்த அதே ஊரைச் சேர்ந்த முருகையன் மகன் மணிகண்டன்(27) என்பவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் தாயார் விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் கிருபாலட்சுமி மற்றும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர். .

இந்த வழக்கு கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் நீதிபதி எழிலரசி நேற்று, மணிகண்டனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் கலாசெல்வி ஆஜரானார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in