உண்டியலை உடைத்து கொள்ளை

உண்டியலை உடைத்து கொள்ளை
Updated on
1 min read

தியாகதுருகம் அருகே உள்ள பல்லகச்சேரி கிராமத்தில் பழமை வாய்ந்த செல்லியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் நேற்று முன்தினம் இரவு பூசாரி ஏழுமலை பூஜையை முடித்துவிட்டு வழக்கம்போல் கோயிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலை கோயிலை திறக்க வந்தபோது, 4 மர்ம நபர்கள் சாக்குப்பையோடு, வெளியேறியதைக் கண்டு, கூச்சலிட்டுள்ளார். போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை செய்தனர்.மர்ம நபர்கள் கோயிலின் பூட்டை உடைத்து அங்கிருந்த பெரிய உண்டியலில் இருந்த காணிக்கைகளை சாக்கு பையில் எடுத்து சென்றது தெரியவந்தது. விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in