பவானிசாகரில் உற்சாகமாக குளியல் போட்ட யானைகள்

பவானிசாகர் அணையில் உற்சாகக் குளியல் போடும் யானைகள்.
பவானிசாகர் அணையில் உற்சாகக் குளியல் போடும் யானைகள்.
Updated on
1 min read

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானைக்கூட்டம் பவானிசாகர் அணையில் உற்சாகக் குளியல் போட்டுவிட்டு திரும்பின.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் இருந்து கூட்டம், கூட்டமாக வெளியேறும் யானைகள் பவானிசாகர் அணைப்பகுதியையொட்டிய சாலைப்பகுதிகளில் சுற்றி வருகின்றன.

இந்நிலையில், நேற்று முன்தினம் பவானிசாகர் அணையின் மேல்பகுதியில் உள்ள ஜீரோ பாயிண்ட் என்ற இடத்தில், 20-க்கும் மேற்பட்ட யானைகள் குட்டிகளுடன் கூட்டமாக சுற்றின. பின்னர், தனது குட்டிகளுடன் அணைக்குள் இறங்கி, உற்சாகமாக குளித்தன. அரைமணி நேரத்திற்கு பிறகு யானைகள் கூட்டம் வனப்பகுதிக்குள் திரும்பின.

வனத்துறையினர் கூறும்போது, பவானிசாகர் அணைப்பகுதியில் யானைகள் கூட்டமாக நடமாடி வருகின்றன. இப்பகுதியில் ஆடு, மாடு மேய்ப்பவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். யானைக் கூட்டத்துடன் புகைப்படம் எடுக்க முயற்சிக்கக் கூடாது, என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in