சேலத்தில் வனத்துறை ஊழியர்களுக்கு பயிற்சி

வனப்பகுதியில் ஏற்படும் பேரிடர்களின்போது மீட்பு பணியை மேற்கொள்வது குறித்து வனத்துறையினருக்கு நேற்று சேலத்தில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
வனப்பகுதியில் ஏற்படும் பேரிடர்களின்போது மீட்பு பணியை மேற்கொள்வது குறித்து வனத்துறையினருக்கு நேற்று சேலத்தில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
Updated on
1 min read

வனப்பகுதிகளில் ஏற்படும் காட்டுத் தீ, யானைகள் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு இடையூறுகளில் சிக்கியவர்களை பாதுகாப்பாக மீட்பது தொடர்பாக சேலம் மண்டல வனத்துறை ஊழியர்களுக்கு சேலம் அஸ்தம்பட்டியில் சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது.

வனப்பகுதிகளில் ஏற்படும் இடையூறுகளின்போது மீட்புப் பணியில் ஈடுபட தமிழக அளவில் 2 சிறப்பு படைகள் உருவாக்கப் பட்டுள்ளன. இப்படையினர் வன ஊழியர்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். சேலம், நாமக்கல் மாவட்ட வனப்பகுதிகளை உள்ளடக்கிய சேலம் மண்டலத்தைச் சேர்ந்த வன ஊழியர் குழுவினருக்கு நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது.

மண்டல வனப்பாதுகாவலர் பெரியசாமி தலைமை வகித்தார். மாவட்ட வன அலுவலர்கள் சேலம் முருகன், நாமக்கல் காஞ்சனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி வனப்பாதுகாவலர் மகேந்திரன் பயிற்சி அளித்தார். வனச்சரகர்கள் ஏற்காடு சுப்பிரமணியன், டேனிஷ்பேட்டை பரசுராமமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in