

தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்குக் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கக் கோரிய வழக்கில், சுகாதாரத்துறை செயலர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சியைச் சேர்ந்த அஞ்சலை, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
எனது கணவரை கரோனா சிகிச்சைக்காக நவ. 7-ல் திருச்சி தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். முன்பணமாக ரூ.50,000 செலுத்தினோம். 2 நாள் கழித்து ரூ.2,20,000 கட்டச் சொன் னார்கள். இதனால் கணவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு நடத்தப்பட்ட பரிசோத னையில், என் கணவருக்கு கரோனா தொற்று இல்லை என் றார்கள். இருப்பினும், மாரடைப்பு ஏற்பட்டு நவ. 28-ல் எனது கணவர் உயிரிழந்தார்.
தனியார் மருத்துவமனையில் கரோனா சிகிச்சை மற்றும் கரோனா தொற்று பரிசோதனைக்கு அரசு நிர்ணயம் செய்துள்ளதை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கின் றனர். எனவே கரோனா தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுத்து, அரசு நிர்ணயம் செய்த தொகையை தனியார் மருத்துவ மனைகள் வசூலிப்பதை உறுதி செய்ய உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டி ருந்தது.
இந்த மனு நீதிபதிகள் என்.கிரு பாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கணபதி சுப்பிரமணியம் வாதிட்டார். மனு தொடர்பாக சுகாதாரத் துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 3 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.