விவசாயிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

விவசாயிக்கு  10 ஆண்டுகள் சிறை தண்டனை
Updated on
1 min read

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் வட்டம் ஓகைப்பேரையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி மோகன்தாஸ்(34). இவர், 2018-ம் ஆண்டு 15 வயது சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து, மோகன்தாஸை கைது செய்தனர்.

திருவாரூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் நீதிபதி சுந்தர்ராஜன் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தார். அதில், மோகன்தாசுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in