நாளை விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்

நாளை விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு :

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் காணொலிக்காட்சி மூலம் நாளை (டிச. 24) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இதில் விவசாயிகள் தங்கள் பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் இருந்து காணொலிக்காட்சி மூலம் பங்கேற்கலாம்.

பங்கேற்க விரும்பும் விவசாயிகள் தங்கள் பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பதிவு செய்து, தங்கள் குறைகளைத் தெரிவிக்கலாம். கோரிக்கை மனுக்களை நாளை அல்லது அதற்கு முன்னதாக தங்கள் பகுதி அலுவலகத்தில் ஒப்படைக்கலாம். அந்த மனுக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலம் பெறப்பட்டு, உரிய துறைகளுக்கு அனுப்பி பதில் பெறப்பட்டு விவசாயிகளுக்கு அனுப்பிவைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in