விழுப்புரத்தில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு

விழுப்புரத்தில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு
Updated on
1 min read

விழுப்புரம் நகராட்சிக்கு உட் பட்ட விராட்டிக்குப்பம் ரோடு,தெய்வநகர், ஷீரடி சாய்நகர், ஏபிஎஸ்நகர் விரிவு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஆட்சியர் அண்ணாதுரையிடம் நேற்று மனு அளித்தனர். மனுவில் கூறியிருப்ப தாவது:

நகராட்சியின் அனுமதி பெறாமல் தனியார் செல்போன் நிறுவனத்தினர் டவர் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஓராண்டு முன்பு பக்கத்து தெருவில் இதுபோன்ற டவர் அமைக்கும் போது நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் மனு அளித்ததால், டவர் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது.

தற்போது மீண்டும் டவர் அமைக்கும் பணி நடைபெறுவதால் அதனை நிறுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in