குவாரிக்கு எதிர்ப்பு எரிச்சநத்தம் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

குவாரிக்கு எதிர்ப்பு  எரிச்சநத்தம் கிராம  மக்கள் ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

விருதுநகர் அருகே எரிச்சநத்தம் பகுதியில் விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதமாகவும், நிலத்தடி நீரை பாதிக்கும் விதமாகவும் புதிதாக அமையவுள்ள குவாரி மற்றும் கிரஷர் ஆகியவற்றை எதிர்த்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

எரிச்சநத்தம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜக கிழக்கு மாவட்டத் தலைவர் கஜேந்திரன், கிழக்கு மாவட்ட விவசாய அணித் தலைவர் ரெங்கராஜா, மாவட்ட விவசாய அணி பொதுச் செயலர் ராஜேந்திரன், விவசாய அணிப் பொருளாளர் ராமநாதன், தமிழ்நாடு விவசாய சங்க நிர்வாகி முருகன், எரிச்சநத்தம் ஒன்றியக் கவுன்சிலர் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அனைத்துக் கட்சியினர், விவசாயிகள் மற்றும் கிராம பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர். குவாரி அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரி வித்து கோஷமிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in