சமூக சேவையில் ஈடுபடும் இளையோர் மன்றங்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

சமூக சேவையில் ஈடுபடும் இளையோர் மன்றங்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
Updated on
1 min read

மதுரை மாவட்ட நேரு யுவகேந் திராவுடன் இணைந்து செயல்படும் இளையோர் மன்றங்களுக்கு 2019-20-ம் ஆண்டுக்கு மாவட்ட அளவிலான விருதுக்கான விண்ணப்பம் தற்போது வழங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப் பத்தை “மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர், நேரு யுவ கேந்திரா, 30, ஆசாத் தெரு, காந்திநகர், மதுரை-625020” என்ற முகவரியில் நேரில் பெற்று, பூர்த்தி செய்து கொடுக்கலாம். விண்ணப்பிக்க வரும் 26-ம்தேதி கடைசி நாள் ஆகும்.

கூடுதல் விவரங்களுக்கு 0452-2539237 மற்றும் 9445662559 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். ஆட்சியர் தலைமையிலான குழு விண்ணப்பங்களைப் பரிசீலித்து சிறந்த இளையோர் மன்றத்தை தேர்வு செய்யும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in