70% மானியத்தில் சூரியசக்தி பம்ப் செட்டு அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்பு

70% மானியத்தில் சூரியசக்தி பம்ப் செட்டு  அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்பு
Updated on
1 min read

பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான எரிசக்தி பாதுகாப்பு திட்டத்தின்கீழ், இம்மாவட்டத்தில் சூரிய சக்தியால் இயங்கும் 43 பம்பு செட்டுகள் வழங்கப்பட உள்ளன. இதில் ஆதி திராவிட விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, 20 பேருக்கு இந்த பம்பு செட்டுகள் 70% மானியத்தில் வழங்கப்பட உள்ளன.

இத்திட்டத்தில் ஆர்வமுள்ள விவசாயிகள் வருவாய் கோட்டத்தில் உள்ள உதவி செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை, திருவள்ளுர், திருத்தணி மற்றும் பொன்னேரி அல்லது மாவட்டச் செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in