காட்டுப்பன்றி தாக்கி விவசாயி காயம்

காட்டுப்பன்றி தாக்கி விவசாயி காயம்
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே எம்.புளியங்குளத்தைச் சேர்ந்தவர் கணேசன்(50). இவர் மனைவி, இரு மகன்களுடன் விவசாயம் மற்றும் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். நேற்று காலை தனக்குச் சொந்தமான தோட்டத்தின் அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது கணேசனை காட்டுப் பன்றி தாக்கியது. அவரது அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் ஓடிவந்து காட்டுப் பன்றியை விரட்டியடித்தனர். காயமடைந்த கணேசன் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in