சாலை போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக வாகன ஓட்டிகளுக்கு ரூ.3.86 கோடி அபராதம் விதிப்பு திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி விஜயகுமார் தகவல்

சாலை போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக  வாகன ஓட்டிகளுக்கு ரூ.3.86 கோடி அபராதம் விதிப்பு  திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி விஜயகுமார் தகவல்
Updated on
1 min read

திருப்பத்தூர் மாவட்டத்தில் சாலை போக்குவரத்து விதிமுறைகளை மீறிய தாக 2.94 லட்சம் வழக்குகள் பதிவு செய் யப்பட்டு, வாகன ஓட்டிகளுக்கு ரூ.3.86 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ள தாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

கடந்த 2019-ம் ஆண்டு திருப்பத்தூர் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ளது. மாவட் டத்தில் பல்வேறு வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சாலை போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர்களுக்கு காவல் துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர். அந்த வகையில், கடந்த ஜனவரி மாதம் முதல் டிச. 16-ம் தேதி வரை திருப்பத்தூர் மாவட்டத்தில் சாலை விதிகளை மீறியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்க ளிடமிருந்து ரூ.3.86 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்டகாவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் டிச. 16-ம் தேதி வரை கிட்டத்தட்ட 12 மாதங்களில் சாலை விதிமுறை களை மீறியதாக வாகன ஓட்டிகள் மீது மொத்தம் 2 லட்சத்து 94 ஆயிரத்து 789 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளுக்கு விதிக்கப் பட்ட அபராதத் தொகை 3 கோடியே 86 லட்சத்து 855 ரூபாய் வசூலிக்கப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் இனி சாலை விதிகளை மீறுபவர்கள் அனை வருக்கும் விதிக்கப்படும் அபராதத்தொகையானது, பணமில்லா பரிவர்த்தனை மூலமாகவே வசூலிக்கப்படும். எனவே, போக்குவரத்து விதிமுறை மீறலில் ஈடு படும் வாகன ஓட்டிகள் அபராதத் தொகையை இனி பணமாக செலுத்த வேண்டாம" என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in