

மதுரை தனக்கன்குளத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி வயிற்று வலியால் மதுரை அரசு மருத்துவமனையில் கடந்த 16-ம் தேதி சேர்க்கப்பட்டார். மருத்துவப் பரிசோதனையில் அச்சிறுமி 5 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.
திருமங்கலம் மகளிர் போலீஸார் நடத்திய விசார ணையில், அச்சிறுமியை தனக்கன்குளத்தைச் சேர்ந்த சுகதேவ்(29) என்பவருக்கு 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து வைக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து சுகதேவ்வை(29) போக்ஸோ சட்டத்தில் காவல் ஆய்வாளர் பிரபாதேவி கைது செய்தார்.
உசிலம்பட்டி அருகே உள்ள எழுமலையைச் சேர்ந்த 16 வயது சிறுமியை எம்.பாறைப்பட்டியைச் சேர்ந்த ரமேஷ்(25) திருமணம் செய்துள்ளார். இது குறித்த புகாரின்பேரில் எம்.பாறைப ட்டியைச் சேர்ந்த மணிமாறன், இவரது மனைவி சுமதி, செல்வராஜ், இவரது மனைவி சுமதி, இவர்களது மகன் ரமேஷ் ஆகியோர் மீது எழுமலை போலீ ஸார் வழக்குப் பதிவு செய்தனர்.