கோயில் திருவிழா நடத்த இடையூறு ஈரோடு எஸ்பியிடம் மக்கள் புகார்

கோயில் திருவிழா நடத்த இடையூறு   ஈரோடு எஸ்பியிடம் மக்கள் புகார்
Updated on
1 min read

ஈரோடு அருகே உள்ள மோளக் கவுண்டன்பாளையத்தில் மாரியம்மன், காளியம்மன், கருப்பண்ணசுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் திருவிழாவை நடத்தத் தடையாக உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிராம மக்கள், ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இதுதொடர்பாக கிராமமக்கள் கூறியதாவது:

மாரியம்மன் கோயிலில் கடந்த 20 ஆண்டுகளாக திருவிழா நடத்தி வந்த குழுவினர் 2019-ம் ஆண்டு நடந்த கூட்டத்தின்போது, பொறுப்புகளை ஒப்படைத்து விடுவதாக தெரிவித்தனர். ஆனால், அந்த குழுவினர் வரவு, செலவு கணக்குகளை ஒப்படைக்கவில்லை.

பின்னர் ஊர் பொதுமக்கள் ஒன்றிணைந்து திருவிழா நடத்தினர். இந்த ஆண்டு திருவிழா நடத்த விடாமல் சிலர் இடையூறு செய்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, திருவிழா நடத்த பாதுகாப்பு அளிக்க வேண்டுமென மனு அளித்துள்ளோம், என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in