நெல்லையில் டிசம்பர் 27-ல் சமூகநீதி நூற்றாண்டு மாநாடு நல்லகண்ணு, உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு

நெல்லையில் டிசம்பர் 27-ல் சமூகநீதி நூற்றாண்டு மாநாடு நல்லகண்ணு, உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு
Updated on
1 min read

நெல்லையில் வரும் 27-ம் தேதி சமூகநீதி நூற்றாண்டு மாநாடு நடைபெறுகிறது.

இதுகுறித்து, மாநாடு ஒருங்கி ணைப்பு குழு பொறுப்பாளர் சூர்யா சேவியர் கூறியதாவது:

சமூகநீதிக்கான போராட்டத்தை இந்திய அளவில் முன்னெடுத்ததில் தமிழகம் முதன்மையானது. 1916-ல் தென்னிந்திய நலஉரிமை சங்கம் தொடங்கப்பட்டது. 1919-ல் காங்கிரஸில் இணைந்த பெரியார், 1920 ஜூன் மாதம் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி மாநாட்டில் வகுப்புவாரி பிரதிநிதித்துவ கோரிக்கையை எழுப்பினார். சமூகநீதிக்கான பெரியாரின் குரல் திருநெல்வேலியிலிருந்தே ஒலித்தது.

இதன் நூற்றாண்டு விழா மாநாடு, வரும் 27-ம் தேதி பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெறுகிறது. பொதுவுடமை இயக்க மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தொடங்கி வைக்கிறார். திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் பேசுகிறார், என்றார் அவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in