பிஏபி வாய்க்காலில் இரண்டு பெண்களின் சடலங்கள் மீட்பு

பிஏபி வாய்க்காலில் இரண்டு பெண்களின் சடலங்கள் மீட்பு
Updated on
1 min read

திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே வாவிபாளையம் பகுதியிலுள்ள பிஏபி வாய்க்காலில் இரண்டு பெண்களின் உடல்கள் மிதந்து வருவதாக கிடைத்த தகவலின்பேரில், காமநாயக்கன்பாளையம் போலீஸார் சென்று சடலங்களை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, "சடலமாக மிதந்து வந்த2 பெண்களில் ஒருவருக்கு 30, மற்றொருவருக்கு 40 வயது இருக்கலாம். யார், எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்பது தெரியவில்லை. கொலை செய்யப்பட்டனரா? தற்கொலை செய்து கொண்டனரா? தவறி விழுந்தனரா? என்பதை அறிய, பிரேத பரிசோதனைக்கு சடலங்களை அனுப்பியுள்ளோம். அவர்களது புகைப்படங்களை வைத்து, அருகே உள்ள ஊர்களில் தேடும் பணி நடைபெற்று வருகிறது. அவர்கள் யார்? என்ற தகவல் உறுதி செய்யப்பட்ட பிறகே, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in