கோயில்களில் உழவாரப் பணி

கோயில்களில் உழவாரப் பணி
Updated on
1 min read

நாமக்கல் நேரு யுவகேந்திரா உள்ளிட்ட தன்னார்வ அமைப்பு சார்பில் வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அத்தனூர் கொங்கன சித்தர் கோயில் மற்றும் அலவாய்மலை பாலசுப்பிரமணியர் கோயில் ஆகியவற்றில் உழவாரப் பணி நடைபெற்றது.

கோவை ராமகிருஷ்ணா மிஷன் முன்னாள் மாணவர் சங்க உபதலைவர் மாணிக்கம் தலைமை வகித்தார். நேரு யுவகேந்திரா மன்றத் தலைவர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். சேலம் மாவட்ட கல்வி அலுவலர் மு.ஆ.உதயகுமார் பங்கேற்றுப் பேசினார். தொடர்ந்து அத்தனூர் கொங்கன சித்தர் கோயில் மற்றும் அலவாய்மலை பாலசுப்பிரமணியர் கோயில் வளாகங்கள் தூய்மைப்படுத்தப்பட்டன.

ராமகிருஷ்ணா மிஷன் முன்னாள் மாணவர் சங்க இணைச் செயலாளர் அருணாசலம் உள்பட நேரு யுவகேந்திரா மன்ற நிர்வாகிகள், தன்னார்வ அமைப்பினர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in